Thursday, November 25, 2010

ஜெயலலிதாவும் -கம்யூனிஸ்டுகளும்

பழைய ஞாபகம்; இல்லையோ!
 திருமங்கலம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வை ஆதரித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்கு கேட்கும்போது - தி.மு.க. மீது கடுமையாக பாய்ச்சல் நடத்துகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. பற்றியும், அதன் தலைவி ஜெயலலிதா பற்றியும் சுமார் இருபது மாதங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களும், அதே காலக் கட்டத்தில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி உதிர்த்த சில கருத்துக்களும் - இங்கே தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. அதனைப் படித்துப் பார்த்தால் நம் எண்ணத்தில் தோன்றுவது யாருக்கும் ஞாபகமில்லையோ! என்பதுதான்.

***

மதுரைமேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராசன் பேசியது. (தீக்கதிர் - 19-6-2007)

மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் இந்தியாவின் - தமிழகத்தின் அரசியல் அதிகாரம் எந்தத் திசை வழியில் செல்ல வேண்டும் என்பதற்கான தேர்தல். கடந்த சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருவோம் என வாக்குறுதி தந்த போது அதை ஜெயலலிதா கேலி பேசினார். தி.மு.க. வாக்குகள் பெறுவதற்காக இப்படி வாக்குறுதி தருவதாக கூறினார். பின் அவரே சில நாட்களில் 20 கிலோ அரிசி தருவதாக அந்தர் பல்டி அடித்தார். ஆனாலும் அவர் ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டார். அப்படிப்பட்ட அ.தி.மு.க.தான் மேற்குத் தொகுதியில் வாக்கு கேட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீலகிரியில் 800 ஏக்கர் சொகுசு பங்களாவில் தங்கியிருந்ததாக தொடர்ந்து செய்தி வருகிறதே, அதற்கு அவர் பதில் அளிக்க வேண்டாமா? நில உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் 50 ஏக்கர் நிலத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்ற நிலையில் ஜெயலலிதா எப்படி 800 ஏக்கர் நிலத்தில் பங்களா கட்டினார்? என்ற கேள்வியை மக்கள் கேட்கிறார்கள்.


கடந்த 12 மாதங்களாக மைனாரிட்டி தி.மு.க. அரசை தொலைத்தே தீருவேன் என ஜெயலலிதா பேசி வருகிறார். ஒரு கட்சியை அழிக்கவா தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்காகவா கட்சி கொள்கை வைத்துள்ளது?

17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என அ.தி.மு.க. கூக்குரல் இடுகிறது. மத வெறிக்கு சாதகமாக துணை நின்று சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டேன் என அச்சக்திகளுக்கு ஜெயலலிதா துணை நிற்கிறார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அவர் வற்புறுத்தியதால் தான் வாஜ்பாய் சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி தந்ததாக மேடைக்கு மேடை பேசி வந்தார். தற்போது அதற்கு எதிராக ஜெயலலிதா மதவெறியைக் கிளப்பும் வகையில் பேசி வருவதை எதிர்த்துப் பேச முடியாமல் வைகோ சிக்கித் தவிக்கிறார்.

மதவெறிக்கு பின்னால் நின்று பக்க மேளம் வாசிப்பது தான் அ.தி.மு.க. வின் இன்றைய நிலை.

தமிழகத்தின் தி.மு.க. அரசு நீடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.

கடந்த ஆட்சியின் போது நானும் சி.பி.அய். மாநிலச் செயலாளர் தா. பாண்டியனும் ஜெயலலிதாவைச் சந்தித்து 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தருவது சரியல்ல என்றும், அதை நிலம் இல்லாத கூலி விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தினோம்.

அதற்கு ஜெயலலிதா, முதலில் நிலம் கேட்பீர்கள், பிறகு அதை உழுவதற்கு பணம் கேட்பீர்கள் என்று கேலி பேசினார். அப்படிப் பட்டவர் எந்த முகத்தோடு ஓட்டு கேட்க வருகிறார்?

******************************
*******************

மதுரை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராசன் பேசியது. (தீக்கதிர் - 25-6-2007)

இந்தியாவின் பெரிய பதவியான ஜனாதிபதி தேர்தலுக்கு மாதர் குலப் பிரதிநிதியாக பிரதிபா பாட்டீலை அறிவித்தபோது நாடே மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது. அதை எதிர்த்து தமிழ் நாட்டில் இருந்து ஒரு அவலக் குரல் - பிரதிபா பாட்டீல் தேர்வு அரசியல் ஜோக் என ஜெயலலிதா கூறினார். ஜெயலலிதா கூட்டத்தின் இந்த அகம்பாவத்திற்கு மேற்குத் தொகுதி மக்கள் சரியான அடி கொடுக்க வேண்டும்.

தேச நலன் கருதி, எடுத்த சிறந்த முடிவை அரசியல் ஜோக் என்பது அகம்பாவம். உத்தரப்பிரதேசத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யச் சென்ற ஜெயலலிதா பா.ஜ.க. பற்றி வாயே திறக்க வில்லை. நாளை மதவெறிக் கூட்டத்தோடு இணைக்க ஜெயலலிதா எடுக்கும் முயற்சி தான் இது. இதை வாக்காளப் பெருமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்காலத்தில் வதந்திகளைப் பரப்புவது தேசத் துரோகம் என்று கூறப்பட்டது. தற்போது ஜெயலலிதா வதந்திகளைப் பரப்பி வருகிறார். தமிழகத்தில் குடிசைகளுக்கு பட்டா வழங்கப்படுவது குறித்து குறை சொல்ல ஜெயலலிதாவிற்கு அருகதை உள்ளதா?

************************************************************
திண்டுக்கல் கூட்டத்தில் என். வரதராசன் பேச்சு. (தீக்கதிர் - 15.6.2006)

ரூபாய் இரண்டுக்கு ஒரு கிலோ அரிசி வழங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அ.தி.மு.க. வின் அராஜக ஆட்சியால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். ஜெயலலிதாவின் ஆட்சியில் நெசவுத் தொழில் சீரழிக்கப் பட்டது. தீப்பெட்டித் தொழில் நசிந்து போனது. சேலம் மாவட்டத்தில் கொலுசு தயாரிக்கும் தொழிலாளிகள் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாக என்னிடம் மனு கொடுத்தார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழகம் முழுவதும் உள்ள சிறு தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாயின. சட்டமன்றத்தில் உள்ளவர்களை காட்டு மிராண்டிகள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அத்தகைய ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவு கட்டியதோடு நமது கடமை முடிந்து விடவில்லை. அவர்களை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும். மதுரை தொகுதி சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் பேசியது (தீக்கதிர், 16-7-2006)

முதல்வர் கருணாநிதி உறுதியாக தொழிலாளி பக்கம் நின்று போராட்டத்தை வெற்றி அடையச் செய்ததை மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. நெய்வேலி போராட்டத்திற்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தார். ஆட்சியில் இருந்தால் ஒரு நிலை, இல்லை என்றால் ஒரு நிலை என அவர் பம்மாத்து செய்கிறார். ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களை பழிவாங்கியவர்தானே ஜெயலலிதா. ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கருணாநிதி, என். வரதராசன், நல்லகண்ணு போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்கு தொடுத்தவர்தானே ஜெயலலிதா? அரசு சிறப்பாக நடைபெற தொழிலாளர்கள் சில நேரங்களில் கசப்பு மருந்தைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமென்று சொன்னவர்தானே ஜெயலலிதா.

**************************************************************

விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் டி.கே. ரெங்கராஜன் (தீக்கதிர் 4-8-2006)

ஜெயலலிதா சட்டமன்றத்தில் 2 மணி நேரம் பேசியிருக்கிறார். ஆனால் அவ்வளவு நேரம் பேசியதில் எவ்வித உருப்படியான ஆலோசனையும் இல்லை. தி.மு.க. வை தோழமைக் கட்சிகள் தவறாக வழிகாட்டுவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். கடந்தமுறை ஜெயலலி தாவுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோமே, அப்போதும் இப்படித்தான் நடந்து கொண்டோமா? வண்ணத் தொலைக்காட்சி கொடுக்கவே முடியாது எனக் கூறியவர் - இப்போது அதன் அளவு பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். சினிமாவுக்கு கால்ஷீட் கொடுப்பது போல சட்டமன்றக் கூட்டத்திற்கு வந்து போகிறார்.

**************************************************************************

சென்னை கூட்டத்தில் என். வரதராஜன் பேச்சு. (தீக்கதிர் - 13-8-2006)

தி.மு.க. அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ள மக்களுக்கான பல சிறந்த திட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் தேவையின்றி எதிர்க்கிற கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கவும் லாயக்கற்றதாக அக்கட்சி மாறியிருக்கிறது.

சிறுதாவூரில் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா தங்குவதற்காக கட்டப்பட்ட பங்களா யாருக்குச் சொந்தமானது என்பதைக்கூட சொல்ல முடியாமல் தட்டுத் தடுமாறுகிறார்.

சட்டமன்றத்தில் எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். கம்யூனிஸ்டுகள் தி.மு.க. அரசுக்கு ஜால்ரா போடுவதாக கூசாமல் பேசுகிறார்கள். யார் ஜால்ரா போடுவது? உள்நாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் பன்னாட்டு பகாசூர முதலாளிகளுக்கும் ஜால்ரா போட்டது அ.தி.மு.க. ஆட்சிதான் என்பதை மக்கள் அறிவார்கள். தமிழக முதலமைச்சர் அவர்கள் ரேஷன் கடைகளில் இருந்து நல்ல அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகிறோம்.
கல்விக் கொள்ளைக்குத்தான் கடந்த கால ஜெயலலிதா அரசு உடந்தையாக இருந்தது.

****************************************************************


மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் என். வரதராசன் பேச்சுக்களிலிருந்து சில பகுதிகள்.


வண்டலூர் பகுதியில் துணை நகரம் அமைப்பது குறித்து அரசின் அறிவிப்பைக் கண்டித்து ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அது மிகவும் ஆரோக்கியமற்ற முறையிலும், முதலமைச்சர் கருணாநிதி மீது தனி நபர் வெறுப்பைக் காட்டுகிற முறையிலும் வெளி வந்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

துணை நகரம் சம்பந்தமான விஷயங்களை விட்டு விட்டு, இன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களின் குடும்பத்தினரையும், சொந்தபந்தங்களையும் குறி வைத்து வன்மத்துடன் செய்யப்பட்ட தனி நபர் தாக்குதல் நடவடிக்கையாகும்.

ஜெயலலிதாவின் இந்த அணுகுமுறை, காழ்ப்புணர்ச்சியாகவும், அருவருக்கத் தக்க வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தக் கூடிய விவாதமாகவும் மாறி சட்ட மன்றம் முடக்கப் படுவதில் சென்று முடிவடைகிறது.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு அவை நடவடிக்கைகளை குலைப்பதிலும், மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை திசைதிருப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். இது சட்டமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கி உள்ளது. 2006 மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அவர்களின் அராஜக மக்கள் விரோதப் போக்கிற்கு மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் புகட்டிய பாடத்தை அவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. (தீக்கதிர்- 4-9-2006)

அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு பல்லாயிரக்கணக்கானோர் மனு செய்தனர். ஆனால் அவற்றை அந்த ஆட்சி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது. (என். வரதராசன் பேச்சு - தீக்கதிர் - 9-10-2006)


************************************************************

கம்யூனிஸ்ட்கள் குறித்து பேரவையில் ஜெயலலிதாவின் பாராட்டுகள்.

கம்யூனிஸ்டுகளால் எந்தக் காலத்திலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அதனால்தான் எங்களுடன் கூட்டணி சேர்ந்து இடங்களை வென்று விட்டு, எங்களையே சதா சர்வ காலமும் குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள் (ஜெயலலிதா - 27-3-2003)

நாங்கள் கம்யூனிஸ்ட் பக்கம் கையைக் காட்டினால்தான் அவர்கள் இந்த அவைக்கே வந்து தங்கள் கருத்துகளைக் கூற முடியும் (ஜெயலலிதா - 27-3-2003)

மார்க்சின் சித்தாந்தத்தினைப் பற்றி அந்தக் கட்சியின் உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். இதனால்தான் இந்தக் கம்யூனிஸ்ட் இயக்கங்களே மக்களுக்குப் பயன்படாமல் போய்விட்டன. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இரண்டே காரியங்களைத்தான் செய்கின்றன. ஒன்று எப்போது பார்த்தாலும், எங்கே பார்த்தாலும் போராட்டம்; போராட்டம், போராட்டம்; இல்லையென்றால் பொலிட் பீரோ, செயற்குழு என்று ஒரு கூட்டம் போட்டு 3 நாட்கள், 5 நாட்கள், 7 நாட்கள் என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். இதைத் தவிர வேறு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை (ஜெயலலிதா - 8-4-2003)

மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதன் இரகசியம் - தேர்தலின் போது சுபைபபே செய்கிறார்கள். (ஜெயலலிதா - 8-4-2003)

மாண்புமிகு உறுப்பினர் தங்களுடைய கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகின்ற மேற்கு வங்காளத்தைப் பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார். இங்கே ஒரு ஆதாரத்தை மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவருக்கு நான் கொடுக்க விரும்புகிறேன். இதில் மேற்கு வங்காளத்தில் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து, சட்டசபை முன்பு போராட்டம் நடந்தது. அப்போது மறியல் செய்த ஒருவரை போலீஸ்காரர் துப்பாக்கியால் அடித்து விரட்டும் காட்சி என்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கோவை - மாலைமலர் பத்திரிகையிலே வெளிவந்தது. அதற்கு தலைப்பே தர்ம அடி என்று கொடுக்கப்பட்டிருக்கிறது (ஜெயலலிதா - 8-4-2003)

பசியைப் போக்குவது தான் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் என்கிறார். ஆனால் எந்தக் கம்யூனிஸ்ட் ஆட்சியிலும் சத்துணவுத்திட்டமோ, அன்னதானத்திட்டமோ இல்லை (ஜெயலலிதா - 28-4-2003)

கம்யூனிஸ்ட்கள் வெத்து வேட்டுப் போராட்டங்களை நடத்துவார்கள்; மேடையிலே முழங்குவார்கள்; ஆங்காங்கே கொடி பிடித்துக்கொண்டு நிற்பார்கள் (ஜெயலலிதா - 10-32005).

------------------- நன்றி :"முரசொலி", 4.1.2009

Tuesday, November 23, 2010

ஜெ வோடு விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தாலும் ...! - போட்டு தாக்கும் துரைமுருகன்

தி.மு.க.வை தாக்கிப் பேசும் தனது சுருதியை சமீபகாலமாக அதி கப்படுத்திக் கொண்டிருக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். இதுகுறித்தும், நடப்பு அரசியல் குறித்தும் தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரும் சட்டத்துறை அமைச்சருமான துரைமுருகனை சந்தித்து கேட்டபோது நக்கலாகவும், சீரியஸாகவும் பதில் தந்தார் துரைமுருகன்.

* தி.மு.க.வை ஆட்சியிலிருந்து இறக்குவதுதான் என் லட்சியம்’என்று விஜயகாந்த் சபதம் போட்டிருக்கிறாரே?

முதலில் இப்படி ஒரு கேள்வியை நான் எதிர்கொள்வதற்காக வருத்தப்படுகிறேன். ஏன்னா... தலைவர் கலைஞருக்கு நிகரான ஒரு தலைவர் கருத்து சொல்லியிருந்தால் அதற்கு நான் பதில் சொல்லலாம் அல்லது தி.மு. கழகத்திற்கு இணையான ஒரு கட்சி கருத்துச் சொல்லியிருந்தால் அதற்கு பதில் சொல்வது பொருத்தமாக இருக்கும். ஆனால் விஜயகாந்த்.... கலைஞருக்கோ கழகத்திற்கோ நிகரான இணையானவரா? அதனால்தான் வருத்தப் படுவதாகச் சொன்னேன். சரி.... கேள்விக்கு வருவோம்.... பாவம் விஜயகாந்த்... தேர்தலுக்கு தேர்தல் தலையைத் தூக்கி நான் இருக்கிறேன் என காட்டுபவராக இருக்கிறார். இதைத் தவிர அவரிடம் என்ன இருக்கிறது?

ஒவ்வொரு வருஷமும் பொங்கல் சமயத்தில் வண்டிமாடுகள் மஞ்சுவிரட்டுக்காக அலங்கரிக்கப்பட்டு ஓடும். இதற் காகவே அந்த சமயத்தில் மாடுகள் தலையைத் தூக்கும். அது போல தேர்தலுக்கு தேர்தல் தலையைத் தூக்குகிற விஜயகாந்த், தி.மு.க. வை ஆட்சியில் இருந்து இறக்கு வேன் என சபதம் போடுகிறாரா? நல்ல கதை. ஒவ்வொரு நாளும் பொழுது விடியும், அவருக்கு தெளியும். யாராவது பக்கத்தில் இருப்பவர்கள் தேர்தல் வருவதைப் பற்றி அவருக்குச் சொல்லுவார்கள். இவரும் ஒரு நாளைக்கு மக்களோட கூட் டணி என்பார். மறு நாளைக்கு நான் இல்லாம யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பார், இன்னொரு நாளைக்கு அவரை விட மாட்டேன், இவரை விடமாட்டேன் என்று கதறுவார். சில நேரங்களில் அரசியலில் இவரைப்போல ஜோக் அடிக்கிற போர்வழிகள் தேவைப்படு கிறார்கள். அந்த வரிசையில் அவர் இருந்துவிட்டுப் போகட்டும்.

தேர்தல் நேரத்தில் ஒரு அப்பாவியை அழைத்து அவர் பாக் கெட்டில் இருக்கிற பணத்தை எடுத்து டெபாஸிட் கட்டவைத்து தேர்தலில் நிற்கவைப்பார். அவருக்கு டெபாஸிட் போய்விடும். அடுத்த தேர்தலில் இன்னொரு அப்பாவி மாட்டுவார். அவருக்கும் டெபாஸிட் போய்விடும். தேர்தலில் டெபாஸிட் இழப்பதையே தொழிலாக கொண்ட ஒரு கட்சியை நடத்தும் விஜயகாந்த், தி.மு.க.வை விமர்சிப்பதா? தி.மு.க. ஒரு அகன்ற ஆறு. விஜயகாந்த் ஒரு வாய்க்கால் கூட இல்லை. அப்படிப் பட்டவருக்கு சவால் விடவும் சபதம் போடவும் தகுதியுமில்லை, மக்கள் செல்வாக்கும் இல்லை.

* ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் தேர்தல் கூட்டணிக்காக நெருங்கி விட்டதால்தான் தி.மு.க.வை விஜயகாந்த் தாக்குகிறார் என்கிறார்களே?

தேர்தல் காலத்தில் யாரும் யாரோடும் கூட்டணி சேரலாம் அல்லது சேராமல் போகலாம். ஆனால் யார் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை யாரும் தடுத்து விட முடியாது. ஜெயலலிதா-விஜயகாந்த் கூட்டணி எல்லாம் ஓட்டப் பந்தயத்திற்கு உதவாத கூட்டணி.

* அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சிகளின் அடிப்படையில் அந்த கூட்டணிக்கு 35 சதவீத வாக்கு பலம் இருக்கிறது. அந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் 8 சதவீத வாக்குபலம் கொண்ட விஜயகாந்த்தின் தே.மு.தி.க. கூட்டணி வைக்கும் பட்சத்தில் அ.தி.மு.க. கூட்டணியின் பலம் 43 சதவீதமாக அதிகரித்துவிடும். இது தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கி றார்களே?

அ.தி.மு.க. கூட் டணியில் கட்சிகளின் எண்ணிக்கை கூடலாமே தவிர அவர்களின் வாக்கு எண்ணிக்கை கூடப் போவதில்லை. அவர்கள் போடும் வாக்கு சதவீத மனக்கணக்குகளை யெல்லாம் மாற்றி அமைக்கும் வல்லமையும் ராஜதந்திரமும் கலைஞருக்குத் தெரியும். அதனால் இந்த சதவீத கணக்குகளைச் சொல்லியெல்லாம் எங்களை பயமுறுத்த முடியாது.

* தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருப்பதாக சொல்கிறீர்கள். ஆனால், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கடுமையான விமர்சனங்களால் தி.மு.க. கூட்டணி பலகீனமடைந்துள்ளதாக காங்கிரஸ்காரர்களிடமே எதிரொலிக்கிறதே?

காங்கிரஸ் கட்சி தி.மு.க.வோடு இருக்கிறபோதும் சரி... அ.தி.மு.க.வோடு இருக்கிற போதும் சரி... இரண்டு கட்சிகளுக்கிடையே குறுக்குசால் ஓட்டுகிறவர்கள் இருப்பது உண்டு. அப்படி குறுக்குசால் ஓட்டுபவர்கள் ஒரு கட்டத் துக்குப் பிறகு அடிபட்டு போவதும் உண்டு. அப்படிப் பட்டவர்களின் விமர்சனங்களால் எல்லாம் கூட்டணி பலவீனமாகிவிடாது. இதுபோன்ற சலசலப்புகள் எல்லாம் இந்த கூட்டணியின் பயணத்தின் வேகத்தைக் குறைத்து விடவும் முடியாது. அதனால், இதையெல்லாம் நாங்கள் பெரிதுபடுத்துவது இல்லை.

* தி.மு.க. கூட்டணிக்குள் மீண்டும் நுழைவதற்கு பா.ம.க. முயற்சிக்கிறது. இது தொடர்பாக ஜி.கே.மணி உங்களை அடிக்கடி சந்திக்கிறார். ஆனால், டாக்டர் ராமதாஸோ தி.மு.க.வை விமர்சிக்கிறார். இந்த நிலையில் பா.ம.க.வைப் பற்றி தி.மு.க.வின் நிலைப்பாடுதான் என்ன?

ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க. குழுவினர் ஒருமுறை கலைஞரை சந்தித்து ஆலோசித்து விட்டுப் போனார்கள். அதன்பிறகு, அவர்களிடத்திலிருந்து எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களின் கட்சி நலன் சார்ந்து எந்த முடிவும் எடுக்கலாம். என்ன முடிவு எடுப்பார்கள்ங்கிறது எனக்குத் தெரியாது. ஆனால், யேசுநாதர் சொன்னதுபோல, "இதய சுத்தியுடன் என்னிடத்தில் வருவோரை புறம் தள்ளுவதில்லை' என்பது எங்கள் சித்தாந்தம்.

* தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிகள் எப்படி அமையும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

கூட்டணிகள் எப்படி அமையும் என்று அனுமானிக்கக் கூடிய கட்டம் இன்னும் வரவில்லை என்பதுதான் என் கணிப்பு. ஒரு கட்சி கூட இன்னும் தேர்தல் கிரவுண்ட்டுக்கு வரவில்லை. எல்லா கட்சிகளுமே தனித்தனியாக மரத்தடியில் நின்றுகொண்டு எக்ஸர் சைஸ்தான் பண்ணிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், ஒன்றை மட்டும் என்னால் கணிக்க முடியும். அது... தி.மு.க. -காங்கிரஸ் -விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி நிலை யானது என்பதுதான். எங்கள் கூட்டணிக்குள் மேலும் சிலர் இணையலாம். ஆனால், இணையத் துடிப்பவர்கள் ரெண்டு, மூணு சீட்டுகளை அதிகம் பெற வெளியில் பிகு செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த விறைப்பும் முறைப்பும் தேர்தலில் நாமினேசன் காலம் நெருங்க நெருங்க வெயிலில் உருகும் பனிக்கட்டிபோல கரைந்து விடும். இதனை பல தேர்தல்களில் பார்த்தவன் நான்.

* பிகு பண்ணுகிறார்கள் என்று நீங்கள் சொல்வது பா.ம.க. வைத்தானே?

தனிப்பட்ட எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு நான் சொல்லவில்லை. பொது வாகத்தான் சொல்கிறேன். அதேசமயம் யார், யார் பிகு காட்டுகிறார்கள் என்பது எங்களைவிட நக்கீரனுக்கு நன்றாகவே தெரியும்.

* எம்.ஜி.ஆர். காலத்திலும் அரசியல் செய்திருக்கிறீர்கள். ஜெயலலிதா காலத்திலும் அரசியல் செய்கிறீர்கள். இப்போது புதிதாக விஜயகாந்த். இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தி.மு.க.வால் உருவாக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு அவர் பிரிந்த பிறகும் பகையான பிறகும்கூட சில அரசியல் மரபுகளை மீறியதில்லை. முறித்ததும் இல்லை. உதாரணமாக.... சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் ஒருமுறை, சட்டமன்றத்தை விட்டு வெளியேறி... எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் இருந்த தி.மு.க. கட்சி ஆபீசுக்கு வந்துவிட்டார். ஆனால், கலைஞர் சட்டசபைக்கு வரவேண்டுமென விரும்பினார் எம்.ஜி.ஆர். உடனே க.ராசாராம் தலைமையில் அமைச்சர்கள் சிலரை அனுப்பி கலைஞரை அழைத்துவரச் செய்தார். அரசியல் பண்பாடும் நாகரிகமும் எம்.ஜி.ஆரிடத்தில் பட்டுப்போகவிலை என்பதற்கு இது உதாரணம்.

அதேபோல, ஒருமுறை சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆரை எதிர்த்துப் பேசி அங்கேயே மயங்கி விழுந்துவிட்டேன் நான். பதறிப்போன எம்.ஜி.ஆர்., தனது இருக்கையிலிருந்து எழுந்து எதிர்க்கட்சி லாபிக்கு ஓடிவந்து என்னைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு முதலுதவி சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடு செய்தார். வீட்டுக்கு அனுப்பி வைத்ததோடு அல்லாமல் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை "துரைமுருகன் நல்லா இருக்கிறாரா?' என்று விசாரித்துக்கொண்டே இருந்தார். தி.மு.க.வில் இப்போது இணையவரும் எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க. விசுவாசிகள், "கலைஞர் பெயரை கருணாநிதி என்று யார் சொன்னாலும் அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார் எம்.ஜி.ஆர்.' என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

ஒரு முறை கலைஞரை சிறையில் வைத்தார் எம்.ஜி.ஆர். அதேசமயம் சட்டத்துறை அமைச் சர் நாராயணசாமி முதலியாரை சிறைக்குச் சென்று கலைஞரின் நலன் விசாரித்துவிட்டு வரச் சொன்னார் எம்.ஜி.ஆர். இப்படி நிறைய சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆக எம்.ஜி.ஆர்., அண்ணாவிட மும் தி.மு.க.விடமும் பெற்ற பண்பாட்டு உணர்வுகளை மதித்தவர். அதனை பாதுகாத்தவர். அரசியல் பண்பாடும், நாகரிகமும் எம்.ஜி. ஆரிடத்தில் பட்டுப்போகவே இல்லை. ஆனால் ஜெயலலிதாவிடம் தி.மு.க.வின் அரசியல் பண்பாடும், அண்ணாவின் அரசியல் நாகரிகமும் ஏன்... குறைந்தபட்சம் எம்.ஜி.ஆரின் மனித உணர்வும் கூட இருப்பதில்லை. ஜெயலலிதாவைப் பற்றி ஒரு வரியில் சொல்வதானால், அண்ணாவின் வார்த்தைகளால் சொல்லலாம். அது... "விளைந்த காட்டில் திரிந்த குருவி' ஜெயலலிதா. அதனால், இவரிடம் அரசியல் பண்பாட்டை எதிர்பார்க்கக் கூடாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு ஒப்பிட்டுப் பேசக்கூடியவர் அல்ல விஜயகாந்த் என்பதால்... இதுவெல்லாம் அவருக்குத் தெரியாது. பாவம் விஜயகாந்த் அவரை விட்டு விடுங்கள்.

சந்திப்பு : இளையசெல்வன்
படங்கள் : ஸ்டாலின்
நக்கீரன் 18-09-2010

சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்

"2ஜி' அலைக்கற்றை பிரச்னையை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி மாற்றப்பட்டதற்கான காரணத்தை ஆதாரத்துடன் விளக்கத் தயாரா? என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

அதிகாரி ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு கருணாநிதி விளக்கம் அளிக்க முடியுமா? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"2ஜி' அலைக்கற்றை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு விளக்கம் கேட்டு தன்னைப் போலவே என்னையும் நினைத்துக் கொள்கிறார் ஜெயலலிதா.

இன்றைக்கு என்னைப் பார்த்து சி.பி.ஐ. அதிகாரியை மாற்ற யார் காரணம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு நான் காரணமல்ல; நிச்சயமாக நான் காரணம் அல்ல. இதற்கு மேலும் உங்களிடம் ஆதாரம் ஏதாவது இருக்குமானால் அதை ஆதாரத்துடன் சொல்லத் தயாரா?

அதிகாரிகள் மாற்றம்: ஜெயலலிதா மத்தியில் உள்ள அரசுடன் தோழமையாக இருந்த காலத்தில் சில அதிகாரிகளின் பெயர்களை தன் கைப்படவே எழுதி அவர்களையெல்லாம் மாற்ற வேண்டும் என்றும், அவர்களுக்குப் பதிலாக தான் குறிப்பிடும் நபர்களை அந்த இடத்திலே நியமிக்க வேண்டுமென்றும் கோரியது எல்லா பத்திரிகைகளிலும் செய்தியாக வெளிவந்தது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரிபாஸ்கர், சி.ராமச்சந்திரன் ஆகியோரின் தாற்காலிக வேலை நீக்கங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்; என்.எல்.சி., முன்னாள் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பூபதியின் இடைக்கால வேலை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அதிகாரிகள் பெயர்கள் அடங்கிய பெரிய பட்டியல் ஜெயலலிதாவினால் கொடுக்கப்பட்டது.

அவற்றை ஏற்க மத்தியில் அப்போதிருந்த பாஜக அரசு முன்வரவில்லை. மத்திய அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்க்கப்பட்டது.

அரசியல் உள் நோக்கமா? அலைக்கற்றை பிரச்னையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக் குழுவினை கேட்டுப் பெற வேண்டியதுதானே என்று ஜெயலலிதா சொல்கிறார்.

அலைக்கற்றை விவகாரத்தில் தவறு நடந்திருக்கிறது என்றால், தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட பிறகு அதைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமரும், மத்திய அமைச்சர்களும் மீண்டும் மீண்டும் உறுதி அளித்துள்ளனர்.

அதற்கு முன்வர பாஜகவும், இடதுசாரிகளும் தயங்குவது ஏன்? முறைப்பட மக்களவையில் விவாதிக்கப்பட்ட பிறகு, அந்த அறிக்கை அனுப்பப்பட வேண்டிய பொதுக்கணக்குக் குழுவின் முன்னால் கொண்டு போகப்பட்டு, அந்தப் பொதுக் கணக்குக் குழுவிடம் விவரங்களைத் தெரிவிக்க வேண்டியதுதானே? அந்தக் குழுவின் தலைவராக அவர்களுக்கு வேண்டிய பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர்தானே இருக்கிறார்.

தணிக்கைக் குழு அறிக்கையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால் இதற்கு முன்பெல்லாம் பொதுக் கணக்குக் குழுவின் முன்னால்தான் விசாரிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது மட்டும் அதற்கு இணங்காமல் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழு வேண்டுமென்று கேட்பது ஏன்? இதிலே என்ன அரசியல் உள்நோக்கம் இடம் பெற்றுள்ளது?

தகுதி போதாது: பெரியாரின் கொள்கைகள், அண்ணாவின் கோட்பாடுகளை நான் அடகு வைத்து விட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளார். ""விநாயக சதுர்த்தி'', ""சரஸ்வதி பூஜை'' போன்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் வாழ்த்துச் செய்தி கொடுத்தும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு விமானத்திலே பறந்துச் சென்று ரங்கநாதருக்கு பூஜை நைவேத்தியங்கள் செய்தும் ஜெயலலிதா, பெரியாரின் கொள்கைகளையும், அண்ணாவின் கோட்பாடுகளையும் காப்பாற்றுவதைப்போல நான் காப்பாற்றவில்லைதான்.

எனது அரசியல் குருகுலமே பெரியாரின் ஈரோட்டில் தொடங்கியது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, எனது கொள்கை, கோட்பாடு பற்றி விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு தகுதி போதாது. அடையாறு பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டப் போவதாக அறிவித்து, அங்கு அடிக்கல் நாட்டினார்.

அங்கு நடந்த பூஜையில் கிரானைட் கல் வைக்கப்பட்டு அதில் தனலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது. முதல்வர் ஜெயலலிதா கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்தார். பய பக்தியுடன் சாமி கும்பிட்டார்.

கற்பூர ஆரத்தியைத் தொடர்ந்து, தன் கைப்பட விபூதி குங்கும பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கினார் ஜெயலலிதா. இப்படிப்பட்டவருக்கு பெரியாரின் கொள்கை, அண்ணா கோட்பாடுகளைப் பற்றி பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.dinamani.com/edition/story.aspx?artid=335849&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

Monday, November 22, 2010

ஜெ கோட்டையைக் கலக்கிய அழகிரி!

திருவிழாக் கோலம் பூண்டிருந்தது ஆண்டிப்பட்டி. அப்பல்லோ மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனைகளை இணைத்து.. உ.பி.க்கள் இலவச மருத்துவ முகாமை கோலாகலமாக ஏற்பாடு செய்ய.... 18-ந் தேதி எல்லாப் பக்கமும் கூட்டமான கூட்டம்.

முகாமைத் தொடங்கி வைக்க உற்சாகத்தோடு ஆண்டிப்பட்டி நோக்கிப் புறப்பட்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை வரவேற்க... க.விலக்கு தொடங்கி கடமலைக்குண்டு வரையி லான 26 கி.மீ.தூரத்திற்கும் மக்கள் கூட்டம், கொடி, தோரணங்கள், டிஜிட்டல் போர்டுகள் என அமர்க் களப்பட்டது. அ.தி.மு.க. கோட்டையிலேயே இவ்வளவு கூட்டமா’என ர.ர.க்களே திகைத்துப் போனார்கள்.

மக்கள் கொடுத்த மனுக்களுடன், விழாவில் மைக் பிடித்த அழகிரி ""இந்தத் தொகுதியில் இருந்து ஜெயித்த வர் உங்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பத்தே நாட்களுக்குள் உங்களுக்குத் தேவையான குடிநீர், சாலை, பேருந்து போன்ற வசதிகள் அனைத்தையும் செய்து தருவோம். அரசு நிதி தாமதமானால் என் சொந்தக் காசிலாவது உங்கள் குறைகளைத் தீர்ப்பேன்''’என்று சொல்ல... கூட்டம் ஆரவாரித்தது. முகாமுக்கு வந்தவர்களின் மனநிலை எப்படி?

பொன்னம்படகைச் சேர்ந்த மஞ்சனத்தம்மாளோ ""கொஞ்சநாளா பிரஷர், சுகர்னு கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தேன். ஆனா.. கலைஞர் கட்சிகாரங்க இப்படி ஒரு முகாமை நடத்தி மருந்து, மாத்திரை கொடுத்து தைரியமும் தந்திருக்காங்க. அவங்க நல்லா இருக்கணும்''’என்று கை கூப்பினார்.

கடமலைக்குண்டு பவுன்தாய் நம்மிடம் ’""ஆறுமாசமா கால் வலியால் அவதிப்பட்டுகிட்டு இருந்தேன். இங்க ஒரு ஊசி போட்டாங்க. இப்பவே கால் சரியான மாதிரி வலி குறைஞ்சிருக்கு'' என்றார் நெகிழ்ச்சியாய். ""கண் தெரியலைன்னு பல இடம் போனேன். ஒண்ணும் சரிப்படலை. இங்க பார்த்த டாக்டர்கள் கண்ல புரை இருக்குன்னு சொன்னதோடு நாளைக்கு மதுரை அப்பலோவுக்கு வந்து ஆபரேசன் பண்ணிக்கச் சொல்லியிருக்காங்க. சரியாயிடுமாம். அப்பல்லோவை நினைச்சுக்கூட பார்த்ததில்லை''’ -சொல்லும் போதே சின்னமனூர் ராஜின் கண்கள் கசிகிறது.

தன் குழந்தைக்கு சிகிச்சை பெற்று திரும்பிக்கொண்டிருந்த வருசநாட்டுக் கலாவோ “""விட்டுவிட்டு பிள்ளைக்குக் காய்ச்சல். நாளைக்கு மதுரை ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லியிருக்காங்க. இலவசமா எல்லா செக்கப்பும் பண்ணி குணப்படுத்திடலாம்னு சொல்லியிருக்காங்க. அது போதும்ங்க. இனி தேர்தல்ல தப்பு பண்ணமாட்டோம்''’என்றார் குரல் கமற.

""மலைமக்கள் உட்பட 11 ஆயிரம் பேர்வரை வந்திருக்காங்க. இதைக் கேள்விப்பட்ட கலைஞரே.. அழகிரியை போன்ல பிடிச்சி வாழ்த்தினார்னா பார்த்துக்கங்க''’என்கிறார் தி.மு.க., மா.செ. மூக்கையா பூரிப்பாய்.

அழகிரியின் ஆண்டிப்பட்டி விசிட்... ஜெ. தரப்பை ஆட்டம்காண வைத்திருக்கிறது.

-சக்தி
நக்கீரன் -24-07-2010

ஜெயலலிதா டீ

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்த அடுத்த நாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் கலைஞரிடம் பத்திரிகை நிருபர் ஒருவர்... "கொடநாட்டில் விதிமுறைகளை மீறி டீ எஸ்டேட் கட்டப்படுவதாக தகவல் வெளியாகிறதே, அதற்கேனும் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?' என்று அந்த நிருபர் கேட்ட கேள்வியில் உண்மை இருக்கிறதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஊரக வளர்ச்சி இயக்குநர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்திருக்கிறார்.

இதையடுத்து கொடநாடு தேயிலை எஸ்டேட்டில் ஜெ. தரப்பின் பயங்கர கெடுபிடி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. கொடநாடு டீ எஸ்டேட்டில் ஜெ. தரப்பு விதி முறைகளை மீறிக் கட்டிக் கொண்டிருக்கும் தகவல் உண்மைதானா என விசாரணையில் இறங்கி தடைகள் பல தாண்டி ஜெ. டீ தொழிற் சாலையில் நாம் எடுத்த படங்களை எடுத்துக் கொண்டு கொடநாடு தி.மு.க. ஊராட்சிமன்றத் தலைவரான பொன்தோஸிடம் காட்டினோம்.

""ஆமாம்... இதுதான் புதிதாய் கட்டப் படும் டீ தொழிற்சாலை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொடநாடு மேலாளர் நடராஜன் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக் கும் கொடநாடு தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் 1500 சதுர அடி அளவில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி கோரி விண்ணப்பித் திருந்தார். 1500 சதுர அடிக்குள் கட்டிடம் கட்ட யார் அனுமதி கேட்டாலும் கொடுக்க வேண்டிய கடமை ஊராட்சிமன்றத் தலைவருக்கு இருப்பதால் அனுமதி கொடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அதற்கடுத்த சில நாட்களிலும் அதற்கடுத்த மாதங்களிலும் தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலேயே வெவ்வேறு இடங்களில் 1500 சதுர அடி அளவுள்ள 3 கட்டிடங்களுக்கு தனித்தனியாக அனுமதி கோரி கொடநாடு தரப்பிலிருந்து விண்ணப்பிக்கப் பட்டதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த நான்கு கட்டி டங்களும் வெவ்வேறு இடங்களில் கட்டப்படுவதாய் சொல்லி அனுமதிகளை வாங்கிக்கொண்ட அவர்கள் ஏற்கனவே இருந்த அந்த அனுமதிகளை ஒரே கட்டிடமாக தேயிலை தொழிற்சாலையை விரிவு படுத்திக் கட்டுவதாக தகவல் வந்தது.

நீலகிரி மாவட்டம் மலைப் பிரதேசம் என்பதால் ஒருசேர இந்தளவுக்கு தொழிற்சாலைகளைக் கட்டுவதென்றால் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் அனுமதியும், வனத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, புவி தொழில்நுட்பத்துறை போன்ற துறைகளிடமும் தொழிற்சாலை கட்ட ஆட்சேபம் இல்லை என்று அனுமதி வாங்க வேண்டும். அதோடு அம்மாதிரியான தொழிற்சாலைகளுக்கு த்ரிபிள் ஏ கமிட்டி மற்றும் மலைப்பகுதி பாதுகாப்பு அதிகாரத் திடமும் அனுமதி வாங்க வேண்டும்.

ஆனால் இது மாதிரியான அனுமதிகள் எதையும் வாங்காமல் தொழிற்சாலை கட்டுவது குறித்து விளக்கமளிக்குமாறு 21-11-2009 அன்றே கொடநாடுக் கும் கொடநாடு எஸ்டேட் பங்குதாரர் களான ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் நான் கடிதம் அனுப்பினேன். கொடநாடு எஸ்டேட்டுக்கு ஆய்வு செய்ய சென்றேன். ஆனால் ஜெயலலிதாவும், சசிகலாவும், கொடநாடு எஸ்டேட்டும் பதில் தராமல் நான் அனுப்பிய கடிதத்தைத் திருப்பி அனுப்பியது போலவே கொடநாடு எஸ்டேட்டிற்குள் என்னை நுழைய விடாமல் திருப்பி அனுப்பியது. அதனால் 22-12-09 அன்றே 4 கட்டிடங்களுக்கு கொ டுக்கப்பட்ட அனுமதியை நான் ரத்து செய்து ஆர்டரும் போட்டுவிட்டேன்.

அதற்குப் பின்னால் கொஞ்ச காலம் கட்டிட வேலைகளை நிறுத்தி வைத்திருந்த அவர்கள் பின்னால் கட்டத் தொடங்கினர். இப்போது கிடைத்த தகவல், அவர்கள் மேலும் நான்கு கட்டிடங்களை எந்தவித அனுமதியும் இன்றி கட்டிக்கொண்டி ருக்கிறார்கள் என்பதுதான். நிச்சயம் கலைஞர் அமைத்திருக்கும் விசாரணைக் கமிஷன் மேலும் கொடநாடு எஸ்டேட்டில் நடக்கும் அநியாயங்களை வெளிக்கொண்டு வரும்'' என்கிறார் உறுதியாய்.

கொடநாடு தேயிலைத் தொழிற் சாலையிலிருந்து தயாரிக்கப்படும் டீத் தூள்கள் கொடநாடு டீத்தூள் என்ற பெயரில் பாக்கெட் செய்யப்பட்டு லோக்கலில்-குன்னூரில் மட்டும் விநியோகம் செய்வதோடு எக்ஸ்போர்ட்டும் செய்யப் படுகிறதாம்.

ஆனால் ஜெயலலிதாவோ "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தொடர் நோக்கில்தான் கொடநாட்டில் இருக்கும் லோக்கல் தி.மு.க.காரர்களையும் லோக்கல் தி.மு.க. அமைச்சரையும் வைத்து எனக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற வகையில்தான் பல அவதூறு பிரச்சாரங்களைப் பரப்பிக்கொண்டிருக் கிறார் கருணாநிதி.

உண்மை என்னவென்றால் கொடநாடு எஸ்டேட்டில் மண் சுவரிலான 142 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொழிற் சாலை ஒன்று முற்றிலும் சிதிலமடைந்து கிடக்கும் நிலையில் இருக்கிறது. அதனால் அங்கு பணி புரியும் தொழி லாளர்களின் உயி ருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நல் நோக்கத்திற்காகவே தொழிற்சாலையை புதுப்பிக்கும் பணி கள்தான் நடந்து கொண்டிருக்கின்றன.

சட்டத்திற்கு உட்பட்டு சம்பந் தப்பட்ட அதிகாரி களிடம் முறையான அனுமதி வாங்கித் தான் பழைய தொழிற்சாலையை செப்பனிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் முறையாக நடக்கும் செப்பனிடும் பணிகள் குறித்து விசாரணை செய்ய ஓர் அதிகாரியை கருணாநிதி நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது' என்று மறுப்பு தெரிவித்திருக்கிற நிலையில்... புதிய கட்டிடம் கட்ட கொடநாட்டிலிருந்து அனுமதி கோரிய விண்ணப்பமும், பொன்தோஸ் 4 கட்டிடங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தர விட்ட ஆர்டர் காப்பியையும் வாசகர்களின் பார்வைக்கு நக்கீரன் வைக்கின்றது.

இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். கொடநாட்டுக்கு ஆய்வு செய்ய வருவதையொட்டி பலத்த எதிர்பார்ப்புகள் கொடநாடு முழுக்க பெய்யும் மழையையும் பொருட்படுத்தாது எதிர்பார்த்து நிற்கின்றன. ஆனால் வேண்டுமென்றே இப்படியானப் பொய்களைப் புனைந்து ஆய்வு செய்ய வரும் ஆய்வுக்குழுவை அனுமதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்க முயற்சி செய்துகொண்டிருக்கிறதாம் கார்டன் தரப்பு.

-அருள்குமார்
nakkeeran-03-07-2010

கொடநாடு எஸ்டேட்டை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு வழக்கு(செவ்வாய்க்கிழமை, 24, ஆகஸ்ட் 2010 (21:52 IST)
கொடநாடு தேயிலைத் தோட்டத்தை ஆய்வு செய்ய அனுமதிக்க கோரி கொடநாடு ஊராட்சிமன்ற  தலைவர் பொன்தோஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவிற்கு, மூன்று வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு எஸ்டேட் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன்தோஸ் தாக்கல் செய்த மனுவில், கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் 4 கட்டிடங்கள் கட்ட கடந்த ஆண்டு அனுமதி வாங்கியது. ஆனால் விதிமுறைகளை மீறி தொழிற்சாலையைப் போன்று ஒரே கட்டிடங்களை கட்டி வருகிறது. இதனால் அந்த கட்டிடம் கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து எஸ்டேட்டை ஆய்வு செய்ய நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 6ஆம் தேதி வருவாய்துறை அதிகாரிகள் எஸ்டேட்டை ஆய்வு செய்ய சென்றபோது, ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதுதொடர்பாக எஸ்டேட் நிர்வாகம் மூன்று வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளன.
--nakkeeran--

கொடநாடு பஞ்சாயத்து தலைவரின் வழக்கை தள்ளுபடி செய்ய கோரி ஜெயலலிதா மனு(திங்கள்கிழமை, செப்டம்பர் 13, 2010, 16:39[IST]

)

கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு நடத்த அனுமதி கோரி பஞ்சாயத்து தலைவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா முறையான அனுமதியின்றி தேயிலை தொழிற்சாலை கட்டுவதாக புகார் வந்ததையடுத்து அதுகுறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரனை தமிழக அரசு நியமித்தது.

அவரது உத்தரவின் பேரில் கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன்தோஸ் மற்றும் அதிகாரிகள் எஸ்டேட்டிற்குள் ஆய்வு செய்யச் சென்றனர். ஆனால் அவர்களை எஸ்டேட் நிர்வாகிகளும் அதிமுகவினரும் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.

இந் நிலையில் கொடநாடு எஸ்டேட் மானேஜர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில் எஸ்டேட்டுக்குள் ஆய்வு நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு, எஸ்டேட்டிற்குள் தேயிலை தொழிற்சாலை கட்ட உரிய அனுமதி பெறப்பட்டிருப்பதால் அங்கு ஆய்வு நடத்தத் தேவையில்லை என்று உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன்தோஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கொடநாடு எஸ்டேட்டிற்குள் சர்வே எண்- 171ல் உள்ள பகுதியில் அனுமதியை மீறி தேயிலை தொழிற்சாலை கட்டப்படுவதாகவும், அதை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இதற்கு ஜெயலலிதாவின் சார்பில் வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் தாக்கல் செய்த பதில் மனுவில், 171 என்ற இல்லாத சர்வே எண்ணை குறிப்பிட்டு அதில் அனுமதி மீறி கட்டிடம் கட்டுவதாக கொடநாடு பஞ்சாயத்து தலைவர் கூறியுள்ளார். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி தர்மாராவ், நீதிபதி சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.

எஸ்டேட் நிர்வாகத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்:

இதற்கிடையே கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பொது பாதையை கிராம மக்கள் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் விதித்த தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு கொடநாடு எஸ்டேட் நிர்வாகிகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது
http://thatstamil.oneindia.in/news/2010/09/13/jaya-asks-hc-reject-kodanadu-panchayat-petition.html

கொடநாடு வழக்கு-அவகாசம் கேட்க ஜெ தரப்புக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்(திங்கள்கிழமை, அக்டோபர் 25, 2010, 15:55[IST])

திங்கள்கிழமை, அக்டோபர் 25, 2010, 15:55[IST]

கொடநாடு பாதை தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மீண்டும் அவகாசம் ஜெயலலிதா தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் வழியே சென்று வர கிராம மக்களுக்கு வழி விடுவது தொடர்பான அப்பீல் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் முகந்தகன் சர்மா, அனில் தவே ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் ஒருவார காலம் அவகாசம் கேட்டார். இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த தரப்பினருக்கு ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்டது. மீண்டும் அவகாசம் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் அது வழங்கப்பட்டது. இப்போதும் ஒரு வார அவகாசம் கேட்பது சரியல்ல. என்றாலும், மீண்டும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. இனி அவகாசமே கேட்கக்கூடாது என்று நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
http://thatstamil.oneindia.in/news/2010/10/25/sc-condemns-jaya-advocate-kodanadu.html

விஜயகாந்த் வேண்டாம் காங்கிரஸ் தான் வேண்டும் மனம் திறந்த ஜெ !


"மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. விலக்கிக்கொண்டால் எந்தவித நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவைக் கொடுப்போம்' என்கிற ஜெ.வின் மனம் திறந்த பேட்டி இந்திய அரசியல் அரங்கில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

பல நாட்களுக்கு முன்பே ஜெ. சந்திப்புக்கு டைம்ஸ் நவ் செய்தியாளர்கள் நேரம் கேட்டிருந்த நிலையில், திடீரென 11-ம் தேதி காலை வந்துவிடும்படி முதல் நாள் மாலையில் தெரிவிக்கப்பட்டிருக் கிறது. அதுவும்கூட மரியாதை நிமித்தமான சந்திப்புக்கான நேரம் என்றுதான் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் சேனல்காரர்கள் எதற்கும் தயாரான நிலையில் போயிருக்கிறார்கள். தன் பேட்டிக்கான டைரக்ட ராக ஜெயலலிதாவே மாறியிருக்கிறார். கேமரா எங்கே வைக்க வேண்டும்... எந்த ஆங்கிளில் இருக்க வேண்டும் என்பது உட்பட எல்லாவற்றையும் அவரே தீர்மானித்திருக்கிறார். கூடவே ஜெயா டி.வி.யின் இரண்டு கேமராக்களும் ஜெ. பேட்டியை ஷூட் செய்திருக்கின்றன. பேட்டிக்கான அறைக்கு ஜெ. வந்தபோது அங்கிருந்த அனைவரையும் வெளியேறச் சொல்லி... அவர் வந்து அமர்ந்த பிறகு செய்தியாளர்களை மீண்டும் அனுமதித்திருக்கிறார்கள். ஜெ. வரும்போது அந்த அறையில் யாரும் இருக்கக்கூடாது என்பது பொதுவாக நடைமுறையில் இருக்கும் விதி என்று அதற்கு காரணம் கூறியிருக்கிறார்கள்.

எப்போதும் ஒருவித இறுக்கத்துடனே இருக்கும் ஜெ. இந்த முறை பேட்டி எடுக்கச் சென்றவர்களிடம் ரொம்பவே நெருக்கம் காட்டி யிருக்கிறார். ஜெயா டி.வி. ஊழியர்களிடமும் இன்முகம் காட்டினாராம். பேட்டியை தொடங்கும் முன்பாகவே தன்னோடு பேசிய டைம்ஸ் நவ் சேனல் எடிட்டர் ஆர்னப் கோஸ்வாமியிடம்... தன்னைப் பற்றி அந்த சேனலில் ஒளிபரப்பான செய்தி ஒன்றுக்கான எதிர்ப்பையும் அழுத்த மாக தெரிவித்திருக் கிறார்.

தன்னிடம் கேட் கப்பட்ட 12 கேள்வி களுக்கும் தயக்கமோ, தடுமாற்றமோ இல்லா மல் பதில் கொடுத் திருக்கிறார். பேட்டி முழுக்க காங்கிரஸ் கட்சித்தலைமையின் கவனத்தை எப்படி யாவது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்.

""ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்தால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று காங்கிரஸ் பயப்படுகிறது. ஆட்சிக்கவிழாமல் இருக்க தி.மு.க.வின் 18 எம்.பி.க்கள் எண்ணிக் கையை சமன் செய்ய வேண்டும். எங்களிடம் 9 எம்.பி.க்கள் இருக் கிறார்கள். ஒத்த கருத் துடைய மற்ற கட் சித்தலைவர்களிடம் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கட்சிகளின் எம்.பி.க்கள் எண்ணிக் கையையும் சேர்த்தால் 18க்கு மேலும் ஒன்றி ரண்டு கூடுதலாக இருப்பார்கள்''’’ என்று வெளிப்படையாக ஜெ. சொன்னபோது பேட்டி எடுத் தவரே ஒரு நொடி அதிர்ந்தார்.

""நீங்கள் கூட்டணியை மாற்றி அமைப்பது குறித்து பேசுகிறீர்கள். அப்படி என்றால் காங்கிரசை ஆதரிக்க நிபந்தனை எதையும் விதிப்பீர்களா?'' என்று கேள்வி எழுப்பப்பட, ""என்னுடைய தரப்பிலிருந்து எந்த நிபந்தனையும் இருக்காது'' என காங்கிரஸ் கட்சிக்கு உறுதி கொடுத்தார் ஜெ. காங்கிரஸ் அரசு கவிழாமல் காக்கும் அளவிற்கான எம்.பி.க்கள் தன்னிடம் இருக்கிறார்கள் என்பதை ஒரு முறைக்கு இருமுறை அழுத்திச் சொன்ன ஜெ., ஒத்தக்கருத்துடைய கட்சிகள் பெயரை சொல்ல மறுத்துவிட்டார்.

மத்தியில் கூட்டணி பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். மாநில அளவிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு தயாராக இருக்கிறீர்களா? என்று கேட்டால் அதைப்பற்றி காங்கிரஸ்தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார்.

சோனியா காந்தி குறித்த தன் விமர்சனங்கள்தான் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைப்பதில் சிக்கலாக இருக்கிறது என்பதால் அதிலும் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதை வெளிப் படுத்தினார் ஜெ. ""அரசியலில் பழைய பிரச்சினைகளை மறக்காமல், பின்னோக்கி பார்த்துக்கொண்டிருந்தால் முன்னேறி செல்ல முடியாது. எனவே கடந்த காலங்களில் நடந்தவைகளை மறந்துவிட வேண்டும். எதிர்காலத்தை நோக்கி நகர வேண்டும்'' என்று சோனியாவுக்கு தன் கருத்தை வெளிப்படுத்தினார் ஜெ.’’

இப்படி வெளிப்படையாக காங்கிரசுக்கு மெசேஜ் கொடுத்திருக்கும் ஜெ.வின் மனநிலை என்ன என்பதை அறிய கடந்த ஒரு வாரத்தில் அவரை சந்தித்த சிலரிடம் பேசினோம்.“ ""ஜெயலலிதாவைப் பொறுத்த வரை காங்கிரஸ் கூட்டணி இருந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார். விஜயகாந்த் தரப்பில் இருந்து அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருப்பதால் அவர்களை எதிர்பார்க்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் ஜெ. கம்யூனிஸ்ட்டுகளும் நம்பிக்கையான கூட்டணிக்கட்சியாக இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார். அதே போல ம.தி.மு.க.வின் ஒரு எம்.பி.யையும் 18 பேர் லிஸ்ட்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை அவர். காங்கிரஸ் கூட்டணிக்கு ஜெ.வை கொண்டு வர முயற்சிக்கும் அ.தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் ஆலோசனைப்படியே இந்தப் பேட்டியை கொடுத்தாராம்.

சோனியாவுடன் சமரசம் செய்ய விரும்புவதையும், நிபந்தனையற்ற ஆதரவு என்பதையும் வெளிப் படையாக அறிவியுங்கள் என்று ஜெ.யின் டெல்லி நண்பர்கள் கருத்தை தன் பேட்டியில் பிரதிபலித்து விட்டார். ஜெ.வைப் பொறுத்தவரை வரும் தேர் தலிலும் தோல்வி என்றால் பெரிய நெருக்கடி உருவாகும் என்று நினைக்கிறார். அந்த நிலையைத் தவிர்க்க கூட்டணி ஆட்சிக்கும் தயார் என தன் மனநிலையை வெளிப்படுத்தி இருக்கிறார். காங்கிரஸ் தன்னோடு வராவிட்டாலும் கூட்டணி ஆட்சிக்கு தி.மு.க.வை நிர்பந்திக்கும். அப்போது அவர்களுக்குள் பிரச்சினை வந்து தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்று நம்பு கிறார். எல்லாவற்றையும் விட குருப்பெயர்ச்சி தனக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்கிற நம்பிக்கையிலேயே இப்படி ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார்'' என்கிறார் கள் அந்த முக்கிய பிரமுகர்கள்.

-சகா
நக்கீரன்

Sunday, November 21, 2010

ஜெயலலிதா போட்ட உத்தரவு -தொண்டர்களுக்கு தொங்கும் தூக்கு கயிறு

""தீயில் கருகி துடிதுடித்து இறந்த அந்த 3 மாணவிகளை நினைக்கும்போது மனம் பதைபதைக்கிறது. அந்தக் கொடூரத்துக்குக் காரணமானவர்களை மன்னிக்கவே முடியாது. அப்பாவி மாணவிகள் தப்பிக்க முடியாத படி பஸ்சின் கதவை மூடித் தீவைத்து, திட்டமிட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைத்தான் சேலம் நீதிமன்றம் வழங்கியுள்ளது. குற்றவாளிகளின் மேல்முறையீட்டை ஏற்றால், நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே வீணாகிவிடும்...!''.

தருமபுரி பஸ்ஸில் மூன்று மாணவிகள் எரித்துக் கொல்லப் பட்ட வழக்கில், 30.8.10 அன்று இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர்கள் ஜி.எஸ்.சிங்வியும் பி.எஸ். சவுஹானும் கனத்த இதயத்தோடு குறிப்பிட்ட உருக்கும் வாசகங்கள் தான் இவை.

கொடைக்கானலில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.



தீர்ப்பு வந்த சிறிது நேரத்தில், அ.தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து தமிழகம் முழுவதுமுள்ள கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் பறந்தது. ஜெ.வுக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் கண்டித்து, சாலைமறியல்கள் ஆர்ப்பாட்டங்கள் என்று தமிழகம் முழுதும் வன்முறைகள் நடந்தன. தருமபுரியிலும் நடந்தது...

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழக மாணவிகள் வந்த பேருந்தை தருமபுரி இலக்கியம்பட்டிப் பகுதியில் வழி மறித்து நிறுத்தி, பெட்ரோலை ஊற்றிப் பற்ற வைத்தார்கள். மாணவிகள் கோகில வாணியும், காயத்ரியும், ஹேமலதாவும் தீயில் கருகி உயிரிழந்தார்கள். அகில இந்தியாவையே அதிர வைத்த இந்தக் கொடூரக் கொலைச் சம்பவத்தில் தருமபுரி மாவட்ட அ.தி.மு.க.வினர் 31 பேர் மீது சேலம் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு நடந்து கொண்டிருந்த போதே ஒருவர் இறந்து விட்டார். எஞ்சிய 30 பேரில் இருவரை விடுதலை செய்தது சேலம் நீதிமன்றம்.

மீதி 28 பேரில், ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனையும், முத்து (எ) அறிவழகன், ரவி, வி.முருகன், வடிவேல், காவேரி, மாணிக்கம், வீரமணி, உதயகுமார், சம்பத், நஞ்சன், ராஜு, மணி, மாதுராமன், முருகேசன், மணி, மாதையன், செல்வம், செல்வராஜ், தௌலத், பாஷா, வேலாயுதம், வி.பி.முருகன், சண்முகம், சந்திரன், செல்லக்குட்டி ஆகிய 25 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது சேலம் நீதிமன்றம்.

தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகிய மூவருக்கும், சேலம் நீதிமன்றம் விதித்த தூக்குதண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், 25 பேருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுச் சிறைத் தண்டனையை 2 ஆண்டாக குறைத்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.

தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறி ஞர்கள் அல்தாப் அகமதுவும், சண்முகசுந்தரமும் ஆஜராகி ""கீழ்க்கோர்ட் குற்றவாளிகளுக்கு விதித்த தண்டனைகளை உறுதி செய்ய வேண்டும்!'' என்று வாதாடினர்.

அ.தி.மு.க.வினர் சார்பில் வாதாடிய சுஷில்குமார், ""இந்த வழக்கில் நம்பகத்தன்மையுள்ள சாட்சிகள் இல்லை. சாலைமறியலில் ஈடுபட்ட புகைப்பட ஆதாரங்களின் அடிப்படை யில் இந்த மூவரும்தான் பஸ்ஸை எரித்திருப்பார்கள் என்பது வெறும் யூகமே... ஆகவே மரண தண்ட னையை ரத்துச் செய்ய வேண்டும்!'' என்று வாதாடினார்.

25 பேருக்கு 2 ஆண்டுத் தண்டனையை உச்சநீதி மன்றமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த 25 பேரும் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த ஆகஸ்ட் 30 நண்பகலில் தருமபுரி அ.தி.மு.க. வட்டாரத்தில் கோபத் தையும் கண்ணீரையும் பார்க்க முடிந்தது.

""யாருக்காக வரிந்து கட்டிக் கொண்டு இதைச் செய்தார்கள். அம்மா வுக்காகத்தானே! அம்மா உத்தரவு போட்டதால் தானே செய்தோம். கீழ்க் கோர்ட்டிலும் ஹைகோர்ட்டிலும் தீர்ப்பு வந்தபோது அம்மா இருக்கிறார்... கட்சி இருக்கிறது... தூக்குத் தண்டனை இல்லாமல் பார்த்துக் கொள்வார்... காப்பாற்றுவார்னு சொன்னாங்களே... இப்ப என்ன நடந் திருக்கு தலைமை பேச்சை கண்ணை மூடிக்கிட்டு அடிமை போல கேட்டு நடந்த மூன்று தொண்டர்களின் கழுத்துக்கு தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றமும் உறுதி செஞ்சுடுச்சு. இனிமேல் என்ன சொல்லுவார்கள்? கருணை மனு போடலாம்னு தானே... சே... ச்சே...!'' என்று பகிரங்கமாகவே சத்தம் போட்டு தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.

அ.தி.மு.க.வினரால் எரித்துக் கொல்லப்பட்ட மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை வீராசாமியை நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தோம்.

""தாமதமானாலும் நீதி சாகாது என்பதைத்தான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. பெறாத பிள்ளைகளான சாட்சிகள் எந்த அதிகாரத்திற்கும் பயப்படாமல் சத்தியத்தில் நின்று சாட்சியளித்தார்கள். தங்கள் கட்சித் தலைமைக்காக எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் எரிக்கலாம், கொல்லலாம் என்று செயல்படுபவர்களுக்கு இதுதான் சரியான பாடம்...!'' கண்ணீரைத் துடைத்தபடி சொன்னார் வீராசாமி.

எரித்துக் கொல்லப்பட்ட கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா பெயரில் "கே.ஜி.எச்.' அறக்கட்டளையை நிறுவிய அதன் தலைவர் அருள் நம்மிடம், ""உச்சநீதிமன்றம் மிக அரிதாகவே மரண தண்டனை விதிக்கிறது. அரசியல் தலைமையின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இனிமேலும், யாரும் இப்படிப்பட்ட கொடிய, இரக்கமில்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே இப்படிப்பட்ட தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு சக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பெருத்த ஆறுதலாக அமைந்திருக்கிறது!'' என்கிறார்.

-வடிவேல்
nakkeeran